இலங்கை நேரம் |
ஊரோடு உறவாட முடியாமல்,
வேரோடு உறவிழந்து,
அயல் நாடெனும் விடுதியில்,
சொந்தபந்தமின்றி தனியாக ,
தன்னுறவுகளுக்காக,
இராப்பகலின்றி நீ படும் பெரும் பாடு,
நாமறிவோம்,
பிறநாட்டில் வாழ்ந்தாலும்,
தன்நாட்டு உறவுகளுக்காக,
நீ சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வைக்கும்,
பதில் கிடைக்கும் நாள் தொலைவில் இல்லை ..!!!!
ஐ . நா வுக்கு உள்ள இரக்கம் கூட நம் அண்டை நாட்டுக்கு இல்லை,
தெருவோரம் பிறந்து அனாதைகளான உறவுகள் போல் நம் சொந்தம்,
எப்போது சேரும் எமது பந்தம்,
காலம் நம்மை பிரிக்கவில்லை,
காலன் நம்மை பிரித்து விட்டான்,
இலையில் நரம்பு போல் இருந்த எம்மை,
இருளில் தள்ள நினைத்த கொடுங்கோலன்,
பார்வை இழக்கும் நாள் பாரினில் வரும்..!!!
கொட்டும் பனியிலும்,
கொடூர குளிரிலும் ,
அந்நாட்டுகாரனே வீட்டினில் முடங்கிய நேரம்,
நமக்காக நீங்கள் வீதியில் இறங்கிய அந்த நாள் ,
வரலாற்றில் பதியப்பட்ட அந்த நிமிடம் ,
நினைக்கும் போதே மெய் சிலிர்கிறது ,
தன்னின மானத்தை நீ மதித்து ,
தாய் மண்ணின் பெருமையை நிலை நாட்டிட ,
வெள்ளமென திரண்ட எமது உறவுகள்,
தமிழர் மனதில் நீங்காத நினைவாக அமைந்த அந்த நொடி,
நினைவுகளில் நீங்காது....!!!!
நமக்காக விடியலை தேடி செல்லும் நீங்கள்,
நிச்சயம் ஒருநாள் அந்த விடியலை பெற்று ,
நமது துயர் நீக்கி ,கண்ணீர் களைந்து ,
நம்மை நிமிர்ந்து பார்க்கும் போது,
உங்களுக்காக பரந்த விழியுடன் ,
வரவேற்பு கம்பளம் விரித்து ,
வழிமீது விழி வைத்து காத்திருப்போம்,
அவர்களுடன் இணைந்து இந்த தமிழனும்...!!!
புலம்பெயர் தமிழா தலைவணக்கம்...!!!!!
kumareswaran
வீறு கொண்டெழுந்த வீர தமிழனே ,
சோதனைகளை கடந்து ,
சாதனைகளை நுகர்ந்து ,
தாய்மண்ணின் மானம் காக்க,
தன்னுயிரை துச்சமென எண்ணி,
பிறறுயிர் காக்கவென ,
தன்னின மானம் காக்கவென ,
மறவர் வழியில் நடந்து,
நீபட்ட பெரும் பாடு யாரறிவார்?
கூரை சரிந்த உனது இல்லமும்,
குருதி படிந்த உன் முற்றமும் ,
நினைக்கையிலே பதைக்குதடா
நீ கடந்த பாதை நினைவினிலே அழியாது ,
நெஞ்சை விட்டகலாது,
அந்த கோர நினைவுகளின் சலனம்,
மறக்குமா????
சொந்த நாட்டினிலே அனாதை என்ற அவலப்பெயர்?
பிறந்த தேசத்திலே பிள்ளைகள் இல்லை,
வளர்ந்த வீட்டினிலே ஆவிகளின் நடமாட்டம்,
எப்போதுதான் தீருமோ எங்களின் ஏக்கம் ??
குட்ட குட்ட குனிந்தது போதும்...!!!!
வீறு கொண்டெழுந்த வேங்கை போல் ,
சீறிப்பாயும் சிறுத்தை போல்,
ஆயிரம் விளக்குடன் எழுந்து நிற்கும் ஆதவன் போலே,
தோல்விகளை கண்டு மிரளாது,
அஞ்சா நெஞ்சுடன்,
விதியை மிஞ்சும் மதியுடன் ,
நாங்கள் வீரத் தமிழரே எனப்பறை சாற்ற
எழுந்து நிற்போம்.............!!!!!!!!!!!!!
ஆக்கம்:- குமரேஸ்வரன்
© Blogger template Shush by Ourblogtemplates.com 2009
Back to TOP